Thursday, August 22, 2013

திருப்பூரில் சுதந்திர தினத்தை முன்னிட்டு புத்தககண்காட்சி

திருப்பூரில் சுதந்திர தினத்தை முன்னிட்டு BSNL ஊழியர் சங்கம், மற்றும் பின்னல் புத்தகாலயம் ஆகியவைகள் இணைந்து புத்தகக்கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.12-08-2013 அன்று பல்லடத்தில் நடந்த புத்தகக் கண்காட்சியில் நமது துறை சம்பந்தமாக சிம் விற்பணை மேளாவும் நடத்தப்பட்டது. புத்தகக்கண்காட்சியில் பல்லடம் [ 12-08-2013 ] மற்றும் திருப்பூரில் [14-08-2013 ] தலா ரூ.20,000 க்கு புத்தகங்கள் விற்பனை ஆனது. தொழிலாளர்கள் மத்தியிலும் , மக்கள் மத்தியிலும் வரவேற்பு அமோகமாக இருந்தது. திருப்பூரில் நடந்த கண்காட்சியில் நமது துறையின் துணைப்பொதுமேலாளர். திரு.ராமசாமி, அவர்கள் கண்காட்சியை திறந்து வைத்து விற்பனையை துவக்கி வைத்தார். . உடுமலை தளியில் நடந்த புத்தக கண்காட்சியில் ரூ. 12,000 /- ம், வெள்ளக்கோவில் நடந்த புத்தககண்காட்சியில் ரூ. 15,000 /- ம் விற்பனையானது. புத்தககண்காட்சியை நடத்திய தோழர்களுக்கு மாவட்டச்சங்கம் மனதார பாராட்டுகிறது.


Sunday, August 18, 2013

திருப்பூரில் புத்தொளி பாய்ச்சிய புத்தகக் கண்காட்சிகள் திருப்பூர், ஆக. 17-மனிதநேயத்தை போற்றும் மாற்றுப் பண்பாட்டை வளர்க்கும் விதத்தில் திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் புத்தகக் கண்காட்சிகள் வெகு சிறப்பாக நடைபெற்றுள்ளன. இந்த புத்தகக் கண்காட்சிகளில் அமோகமாக புத்தக விற்பனை நடைபெற்றுள்ளது. பாரதி புத்தகாலயம், பின்னல் புத்தகாலயம் ஆகியவை இணைந்து புத்தகங்களோடு சுதந்திர தினத்தைக் கொண்டாடுவோம் என்ற முழக்கத்தோடு 50 இடங்களில் புத்தகக் கண்காட்சி நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. அதன்படி சுதந்திரத் திருநாளான 15ம் தேதி திருப்பூரின் பல்வேறு பகுதிகளிலும், அவிநாசி, மங்கலம், பொங்கலூர், மடத்துக்குளம், குடிமங்கலம், காங்கயம், வெள்ளகோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் புத்தகக் கண்காட்சி நடைபெற்றது. ஆசிரியர் அமைப்புகள், தொழிற்சங்கங்கள், வாலிபர் சங்கம், தமுஎகச உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் ஆங்காங்கே புத்தகக் கண்காட்சி நடத்தும் பணியில் இணைந்து செயல்பட்டனர்.திருப்பூர் காங்கயம் சாலை சிடிசி கார்னரில் அரசுப் போக்குவரத்து ஊழியர் சங்கத்துடன் இணைந்து நடத்தப்பட்ட புத்தகக் கண்காட்சியை ஈசா கார்மெண்ட்ஸ் எஸ்.சாதிக் அலி தொடக்கி வைத்தார். இதில் ஏ ஒன் பிரா எஸ்.மோகனசுந்தரம் தலைமை வகித்தார். முன்னதாக மருத்துவர் டி.தங்கவேல் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். லிங்க்ஸ் சௌகத் அலி புத்தகங்களைப் பெற்றுக் கொண்டார். ஓடக்காடு பகுதியில் வாலிபர் சங்கம், சிஐடியு பனியன் தொழிலாளர் சங்கம் நடத்திய புத்தகக் கண்காட்சியை டீமா சங்கத் தலைவர் எம்.பி.முத்துரத்தினம் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் சிஐடியு பனியன் சங்கத் தலைவர் கே.காமராஜ், பொதுச் செயலாளர் சி.மூர்த்தி, நிர்வாகிகள் வி.நடராசன், கே.நாகராஜ் உள்பட பலர் பங்கேற்றனர். இந்த கண்காட்சியுடன் ஓடக்காட்டில் சுதந்திர தினத்தை முன்னிட்டு இரண்டாவது ஆண்டு மக்கள் ஒற்றுமை விளையாட்டுப் போட்டியும் வாலிபர் சங்கம் சார்பில் நடைபெற்றது.கே.தங்கவேல் எம்எல்ஏ கலந்து கொண்டு பரிசளித்து சிறப்புரை ஆற்றினார். வாலிபர் சங்க மாநிலப் பொருளாளர் எஸ்.பாலா கலந்து கொண்டார். திருப்பூர் கலைக்குழுவின் தப்பாட்டமும் கலைநிகழ்ச்சியும் நடைபெற்றது.மடத்துக்குளத்தில் நால்ரோடு பகுதியில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சிக்கு விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் எம்.எம்.வீரப்பன் தலைமை வகித்தார் . எழுத்தாளர் சங்க செயலாளர் பன்னீர்செல்வம் வரவேற்றார். மடத்துக்குளம் எம்எல்ஏ சி.சண்முகவேலு கண்காட்சியைத் தொடங்கி வைத்தார். முன்னாள் எம்.பி. சி.கிருஷ்ணன், பேரூராட்சித் தலைவர் துரையரசன், வட்டாட்சியர் சைபுதீன் உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்திப் பேசினர். சுமார் ரூ.10 ஆயிரம் மதிப்பில் புத்தகங்கள்

காங்கயம் புத்தக கண்காட்சி: ரூ.1 லட்சத்துக்கு புத்தகங்கள் விற்பனை! ________________________________________ காங்கயத்தில் நடைபெற்ற புத்தக கண்காட்சியில் மகிழ்ச்சியுடன் புத்தகம் வாங்கிச் சென்ற அரசு பள்ளி மாணவ, மாணவிகள். திருப்பூர், ஆக. 17-திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில் ரூ.1 லட்சத்துக்கு புத்தகங்கள் விற்பனை நாடந்துள்ளதாக கண்காட்சி பொறுப்பாளர்கள் தெரிவித்தனர். மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் புத்தக வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிப்பதற்காக திருப்பூர் பின்னல் புத்தகாலயம் உதவியோடு காங்கயத்தில் வியாழக்கிழமை காங்கயம் பேருந்து நிலைய வளாகத்தில் இந்த புத்தகக் கண்காட்சி நடைபெற்றது.சுதந்தர தினத்தை புத்தகங்களுடன் கொண்டாடுவோம் என்றமுழக்கத்தை முன்னிறுத்தி திருப்பூர் பின்னல் புத்தகாலயம், காங்கயம் கிளை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மற்றும் அரசு போக்குவரத்து ஊழியர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற இக் கண்காட்சியில் குழந்தை இலக்கியம், அறிவியல், கல்வி, சமூகம், பொருளாதாரம், உலகப் புகழ்பெற்ற இலக்கியங்கள் என்பது உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் ரூ.1லட்சம் ரூபாய்க்கு புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது குறித்து, கண்காட்சியின் பொறுப்பாளரும், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலத் தலைவருமான தோ.ஜாண் கிறிஸ்துராஜ் கூறியபோது, காங்கயத்தில் ஒருநாள் மட்டுமே நடைபெற்ற இந்தப் புத்தகக் கண்காட்சிக்கு 2ஆயிரம் மாணவர்கள் உள்பட மொத்தம் 7 ஆயிரம் வாசகர்கள் வந்திருந்தனர்.இதில், சுமார் 6 ஆயிரம் புத்தகங்கள் விற்பனையாகியுள்ளது. இவற்றின் மதிப்பு ஒரு லட்சம் ரூபாய் ஆகும். காங்கயம் நகரில் முதன்முறையாக புத்தக கண்காட்சி நடத்தப்பட்டதால், குறைவான எண்ணிக்கையிலேயே புத்தக அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. வரும் ஆண்டுகளில் நடத்தப்பட உள்ள இக் கண்காட்சிகளில் அதிக எண்ணிக்கையிலான புத்தகங்கள், பதிப்பகங்கள், அரங்குகள் இடம்பெறுமாறு திட்டமிடஉள்ளோம்.இந்த கண்காட்சிக்கு வந்திருந்த வாசகர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அவர்கள் விருப்பம் தெரிவித்த தலைப்புகளில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள புத்தக கண்காட்சியில் புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்படும் என்றார்.மங்கலம்திருப்பூர் அருகே மங்கலத்தில் சிஐடியு விசைத்தறி தொழிலாளர் சங்கமும், பின்னல் புத்தக நிலையமும் இணைந்து வியாழக்கிழமை புத்தகக் கண்காட்சியும், கருத்தரங்கமும் நடத்தின.மங்கலம் நால் ரோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் பி.மோகன் தேசிய கொடியை ஏற்றி வைத்து முதல் புத்தக விற்பனையைத் தொடங்கினார். முன்னாள் மங்கலம் ஊராட்சிமன்றத் தலைவர் வே.முத்துராமலிங்கம் புத்தகத்தைப் பெற்றுக் கொண்டார். ஏராளமானோர் இந்த புத்தகக் கண்காட்சியை கண்டுகளித்தனர்.நிறைவாக மாலையில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு விசைத்தறி தொழிலாளர் சங்க மாவட்டப் பொதுச்செயலாளர் பி.முத்துசாமி தலைமை வகித்தார். இதில் மாவட்டத் தலைவர் அ.பழனிசாமி வரவேற்றார்.ஏஐடியுசி மாநிலத் தலைவர் கே.சுப்பராயன், சிங்காநல்லூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.சி.கருணாகரன், வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.முத்துக்கண்ணன் ஆகியோர் கருத்தரங்க உரையாற்றினர். நிறைவாக மங்கலம் சிஐடியு நிர்வாகிகளில் ஒருவரான குட்டி என்கிற மோகனசுந்தரம் நன்றி கூறினார்.

Wednesday, August 14, 2013



 செய்தியும் புகைபடமும்
ஜெய்வாபாய் ஈஸ்வரன் அவர்கள்


இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு, திருப்பூர் தொலைபேசி நிலையத்தில் பின்னல் புத்தகாலயம் சார்பாக இன்று நடைபெற்ற புத்தக கண்காட்சியை வாழ்த்தி, நஞ்சப்பா ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியர் திருமதி.சரசுவதி அவர்கள் பேசுகிறார்...சுவாமி விவேகானந்தர் கூறுவார்.. “ முகமது மலையைத்தேடி செல்ல வேண்டும்.. அப்படி செல்லாவிட்டால் மலை முகமதுவைத்தேடி வரவேண்டும்” என்பார்.. அது போல மக்கள் புத்தகம் வாங்க கடைகளுக்கு செல்லவேண்டும்..செல்லாவிட்டால்... புத்தகக்கடையே தொலைபேசி நிலையத்திற்கு வரவேண்டும்... திருப்பூர் மாவட்டத்தில் 50 இடங்களில் புத்தகம் மக்களை நோக்கி படையெடுக்கிறது...

Thursday, August 1, 2013

திருப்பூரில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் கோரிக்கை ஆர்ப்பாட்டம்


திருப்பூர், ஜூலை 30-பிஎஸ்என்எல் நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்களின் நிறைவேற்றப்படாத கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி திருப்பூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருப்பூர் மெயின் தொலைபேசி நிலையம் முன்பாக செவ்வாயன்று நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கிளைத் தலைவர் வாலீசன் தலைமை வகித்தார். இதில் போராட்டத்தை வாழ்த்தி சிஐடியு திருப்பூர் மாவட்டச் செயலாளர் எம்.சந்திரன் பேசினார். பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் மாநில அமைப்புச் செயலாளர் .முகமது ஜாபர் உள்ளிட்டோர் உரையாற்றினர். இதில் சங்க நிர்வாகி எஸ்.சுப்பிரமணியம் உள்பட பலர் திரளாகக் கலந்து கொண்டனர்.

Thursday, July 25, 2013

தீக்கதிர் செய்தி


ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்திடுக







மே.பாளையம், ஜூலை 24-பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்திரம் செய்திட வேண்டும் என்று தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் கோவை மாவட்ட மாநாடு வலியுறுத்தியுள்ளது.தமிழ்நாடு தொலைதொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் கோவை மாவட்ட 5 வது மாநாடு மேட்டுப்பாளையத்தில் உள்ள கல்பனா திருமண மண்டபத்தில் ஞாயிறன்று நடைபெற்றது, இம்மாநாட்டிற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் என்.பி.இராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் எம்.முத்துக்குமார், மாநாட்டு வரவேற்புக்குழு செயலாளர் எம்.பி.வடிவேல் ஆகியோர் வரவேற்புரையாற்றினர். முன்னதாக, தேசியக் கொடியை டி.ஆர்.ராசப்பன் மற்றும் சங்க கொடியை எஸ்.சண்முகசுந்தரமும் ஏற்றி வைத்தனர். மாவட்ட அமைப்பு செயலாளர் சம்பத் தலைமையில் மறைந்த தலைவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதையடுத்து, மாநாட்டை துவக்கி வைத்தும், சுந்தரக்கண்ணன் என்பவரால் வடிவமைக்கப்பட்டிருந்த ஒப்பந்த ஊழியர்களுக்கான கோவை மாவட்ட இணையதளத்தை (http://tntcwucbt.blogspot.in) துவக்கி வைத்தும் சங்கத்தின் மாநிலச் செயலாளர் எம்.முருகையா உரையாற்றினார்.இம்மாநாட்டை வாழ்த்தி மாநில பொருளாளர் கே.விஸ்வநாதன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் கே.ஜே.ராஜாமணி, சுந்தரக்கண்ணன், பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் சி.ராஜேந்திரன், மாநில உதவித் தலைவர் வி.வெங்கட்ராமன், மாநில உதவிச் செயலாளர் எஸ்.சுப்ரமணியம், மாநில அமைப்பு செயலாளர் ஏ.முகமது ஜாபர் ஆகியோர் பேசினர்.தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலாளர் யு.கே.சிவஞானம், சிபிஎம் தாலுகா செயலாளர் சி.பெருமாள், பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாநிலத் தலைவர் மாரிமுத்து ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
புதிய நிர்வாகிகள்
இம்மாநாட்டில், தொலைத் தொடர்புத் துறையில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. இதில் தலைவராக எம்.முத்துக்குமார், செயலாளராக டி.ரவிச்சந்திரன், பொருளாளராக கே.கருப்புசாமி மற்றும் 19 பேர்களை கொண்ட புதிய நிர்வாக கமிட்டி தேர்ந்தெடுக்கப்பட்டது. இம்மாநாட்டில், 400க்கு மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Monday, July 22, 2013

CIRCULAR


http://www.scribd.com/doc/155445263/Cbe-Circular-50

Thursday, July 4, 2013

என்எல்சி பங்கு விற்பனையைக் கண்டித்து பிஎஸ்என்எல்-எல்ஐசி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


என்எல்சி பங்கு விற்பனையைக் கண்டித்து பிஎஸ்என்எல்-எல்ஐசி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் -------------------------------------------------------------------------------- திருப்பூர், ஜூலை 4- நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் (என்எல்சி) பங்குகளை விற்பனை செய்யும் மத்திய அரசின் முடிவை கைவிட வலியுறுத்தி எல்ஐசி மற்றும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.நெய்வேலி என்எல்சி பொதுத்துறை நிறுவனப் பங்குகளை விற்பனை செய்வதென்ற மத்திய அரசின் முடிவைக் கண்டித்து தொலைத் தொடர்பு ஊழியர் அதிகாரிகள் சங்கக் கூட்டமைப்பு சார்பில் திருப்பூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்பூர் மெயின் தொலைபேசி நிலையம் முன்பாக புதன்கிழமை நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு எஸ்என்இஏ சங்கத்தைச் சேர்ந்த பழனிவேல்சாமி தலைமை வகித்தார். பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாநில அமைப்புச் செயலாளர் ஏ.முகமது ஜாபர், என்எப்டிஇ சங்கத் தலைவர்களில் ஒருவரான ஜெகநாதன், எப்என்டிஓ சங்க நிர்வாகி தனபதி, ஏடிபி சார்பில் ஜான் சாமுவேல் ஆகியோர் மத்திய அரசின் பொதுத்துறை பங்கு விற்பனை முடிவைக் கண்டித்து உரையாற்றினர். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நிறைவாக கணக்குத்துறை அதிகாரிகள் சங்கத்தைச் சேர்ந்த கேசவன் நன்றி கூறினார். கோவை பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி பங்குகளை தனியாருக்கு விற்க முயலும் மத்திய அரசை கண்டித்து தொலைதொடர்பு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கோவை மெயின் எக்ஜேஞ் அருகில் வியாழனன்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பி.எஸ்.என்.எல்.யு வின் மாவட்ட செயலாளர் சி.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். என்.எப்.டி சங்கத்தின் சார்பில் ராமகிருஷ்ணன், எஸ்.என்.இ.ஏ வின் பிரசன்னா, அதிகாரி சங்கங்களின் சார்பில் உஸ்மான் அலி, பி.எஸ்.என்.எல்.யு சார்பில் வெங்கட்ராமன் ஆகியோர் கோரிக்கை விளக்கி பேசினர். நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தின் முடிவில் கே.சந்திரசேகரன் நன்றி கூறினார். உதகை அகில இந்திய காப்பீட்டுக் கழக ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் உதகையில் புதனன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் நாகேசுவரன் தலைமை தாங்கினார். முகவர்கள் சங்கத்தின் நிர்வாகி ஜெயபால் வாழ்த்துரை வழங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் எல்ஐசி ஊழியர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு, பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயப்படுத்தும் மத்திய அரசின் நடவடிக்கைகளை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். நிறைவாக எல்ஐசி ஊழியர் சங்கத்தின் செயலாளர் கோபால் நன்றி கூறினார்.

Monday, June 10, 2013

நாகர்கோயில் BSNLEU புதிய இணையதள செய்தி

                   நன்றி நாகர்கோயில் BSNLEU புதிய இணையதளம்
BSNL EMPLOYEES UNION &
TAMILNADU TELECOM CONTRACT WORKERS UNION
NAGERCOIL SSA.
DATE : 06.06.2013
TO
The General Manager,
BSNL, Nagercoil.
Sir,
SUB : House Keeping and General Services in
Nagercoil SSA- stoppage of work – reg.
-oOo-
It has come to our notice that, the present tender for House Keeping and General Services in Nagercoil SSA, has been withdrawn. As a result, all kind of House Keeping works such as sweeping, cleaning, drinking water supply have been stopped all of a sudden in our SSA. Moreover, cable maintenance, Line maintenance, Tower and BTS maintenance, CSC services, file movements in the offices have severely been affected.
All the workers nearly 200 persons, who have been working for more than 10 years minimum and contributed to the BSNL services in various categories have been denied work, all of a sudden, without any valid reason.
It is requested to your good office to kindly engage all these 200 workers without break, for the above said works such as cable maintenance, Line maintenance, Tower maintenance, CSC services, file movements in the offices, etc., and payment be made durably by the BSNL District Administration.
We hope the District Administration will act promptly and positively, to restore the services and to maintain industrial peace.
Thanking you,
Yours faithfully,
(K.George)
Secretary, BSNLEU.
(A.Selvam)
Secretary, TNTCWU.
Nagercoil SSA.
COPY TO :
1) The Chief General Manager, BSNL, TamilNadu Circle, Chennai.
2) Sri. S.Chellappa, Circle Secretary, BSNLEU,TN Circle, Chennai.
3) Sri. M. Murugiah, Circle Secretary, TNTCWU, TN Circle, Chennai.
கோவை, ஜூன் 5-
தனியார் தொலை தொடர்பு நிறுவனங்களின் லாப வேட் கைக்காக அரசின் பொதுத் துறை நிறுவனமான பிஎஸ் என்எல்-லை முடக்க மத்திய அரசு சதி செய்வதாக கோவை யில் நடைபெற்ற பிஎஸ் என்எல் ஊழியர் சங்க வெற்றி விழா கூட்டத்தில் சங் கத்தின் பொதுச்செயலாளர் அபிமன்யு குற்றம் சாட்டி னார்.பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம், தொழிற்சங்க அங்கீ காரத்திற்கான தேர்தலில் தொடர்ந்து ஐந்து முறை வெற்றி பெற்றதையடுத்து சங்கத்தின் தமிழ்நாடு மாநில குழுவின் சார்பில் வெற்றி விழா சிறப்பு கூட்டம் செவ் வாயன்று கோவையிலுள்ள பிஎஸ்என்எல் மெயின் எக் சேஞ்சில் நடைபெற்றது. மாநி லம் முழுவதும் இருந்து நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்ட இந்த விழா விற்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் கே.மாரிமுத்து தலைமை தாங்கினார்.
மாநில துணை தலைவர் வி.வெங்கட் ராமன் வரவேற்புரை நிகழ்த் தினார். இந்த வெற்றி விழா கூட்டத்தில் கலந்து கொண்டு ஊழியர் சங்கத்தின் அகில இந்திய பொதுச் செயலாளர் அபிமன்யு பேசியதாவது:பொதுத்துறை நிறுவன மாய் இருக்கிற பிஎஸ்என் எல்லில் நடைபெற்ற தொழிற் சங்க அங்கீகார ஆறு தேர் தல்களில் தொடர்ந்து ஐந்து முறை பிஎஸ்என்எல் ஊழி யர் சங்கம் வெற்றி பெற்றிருக் கிறது. இந்த தேர்தலில் போட்டியிட்ட அனைத்து சங்கங்களும் பெருமளவு வாக்கு வங்கியில் சரிவை சந்தித்திருக்கிறது. ஆனால் பிஎஸ்என்எல் ஊழியர் சங் கம் இந்த தேர்தலில் தனது வாக்கு வங்கியின் சதவிகி தத்தை அதிகரித்திருப்பது டன், 48.6 சதவீதம் வாக்கு களை பெற்று முதன்மை சங்கமாக அங்கீகரிக்கப் பட்டுள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனத் தில் ரூ.50 ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன. இந்த சொத்துக் கள் நாசகர பாதையில் செல் லும் அரசின் கண்களை உருத்துகிறது. இதன் விளை வாகவே சிதம்பரம் உள் ளிட்ட நபர்களை கொண்டு சர்வ வல்லமை படைத்த குழுக்களை அமர்த்தியிருக் கிறார்கள்.
பங்கு விற்பனை உள்ளிட்டு எந்த எந்த பாதை யில் சென்றால் இதை வாரி சுருட்டலாம் என திட்ட மிடுகின்றனர். பிஎஸ்என்எல் நிறுவனத் திற்கு நாடு முழுவதும் 29 ஆயிரம் எக்சேஞ்சுகள் உள் ளன. இவற்றில் 28 ஆயிரம் எக்சேஞ்சுகள் கிராமப்புறங் களிலும், ஜார்க்கண்ட், சத் திஸ்கர் உள்ளிட்ட மலைப் பகுதியிலும் உள்ளன. ஆனால் தனியார் தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு நகர் புறத்தை தாண்டி ஒரு எக் சேஞ்ச் கூட இல்லை. இவர் களுக்கு லாபம் மட்டுமே குறிக் கோள். தனியார் நிறுவனங் களோடு பிஎஸ்என்எல் போட்டியிடக் கூடாது. இதை முடக்க வேண்டும் என்பதற் காகவே வாடிக்கையாளர் கள் பிஎஸ்என்எல் பக்கம் திரும்பக் கூடாது என்கிற எண்ணத்தில் உதிரிபாகங் கள், கருவிகள் வாங்குவதில் இழுத்தடிப்பு போன்ற செயல் களில் அரசும், நிர்வாகமும் சேர்ந்து செயல்படுகிறது.இந்த நிலையிலேதான் ரிலையன்ஸ் நிறுவனம் யாருக் கும் தெரியப்படுத்தாமலே 45 சதவிகிதம் கட்டணத்தை உயர்த்தியது. அரசு பாலூட்டி, தேனூட்டி வளர்க்கின்ற இந்த தனியார் நிறுவனங்கள் தான் கடந்த மூன்று மாதத் தில் மட்டும் சுமார் 4 கோடி வாடிக்கையாளர்களை இழந்து இருக்கின்றன. ரிலை யன்ஸ் 1 கோடியே 60 லட் சம், டாடா 88 லட்சம், வோடா போன் 51 லட்சம், ஏர்டெல் 40 லட்சம், ஏர்செல் 36 லட்சம் என இந்த காலத்தில் வாடிக்கையாளர்களை இழந்திருக்கிறது. தனியார் நிறுவனங்கள் இந்த சரிவை சந்தித்திருக் கிற இந்த காலகட்டத்தில் தான் பிஎஸ்என்எல் ஊழியர் களின் தன்னலமற்ற சேவை யின் விளைவாய் 2 லட்சத்து 69 ஆயிரம் புதிய வாடிக்கை யாளர்களை இணைத்துள் ளோம். பொதுத்துறையை பாதுகாப்பது என்பது தேச நலனை பாதுகாப்பது என் கிற பார்வையில் நாம் போராடு கிறோம்.
இந்த போராட்டத் தில் மும்முனை போராட் டத்தை நடத்த வேண்டியிருக் கிறது. அரசின் நாசகர கொள் கையை எதிர்த்த போராட் டம், சொந்த வீட்டிலே திருடு கிற நிர்வாகத்தை எதிர்த்த போராட்டம், நமது ஊழியர் கள் வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்துகிற போராட் டம். இந்த மும்முனை போரட் டத்தில் நாம் வெற்றி பெறு வோம். அதன் பொருட்டே நமது சங்கத்திற்கு மாபெரும் வெற்றியை அளித்திருக் கிறார்கள் இதை பாதுகாப் போம்.இவ்வாறு அவர் பேசி னார். மேலும், இந்த வெற்றி விழா கூட்டத்தில் சிஐடியு மாநில துணைச் செயலா ளர் கருமலையான் கலந்து கொண்டு பேசியதாவது, தன்னலமற்ற தலைமையும், வர்க்க போரில் சமரசமற்ற போராட்டமே இந்த வெற் றியை பெற்று தந்திருக்கிறது. எதிர்வரும் தேர்தலில் ஆளும் மத்திய அரசு தோற்று விடும் என்று உறுதியாக தெரிந்த பின்னர் எவ்வளவு வேகமாக பொதுத்துறை நிறுவனங் களின் பங்குகளை தனியா ருக்கு விற்க முடியுமோ அவ் வளவு விரைவாக விற்கிற சதியை திட்டமிட்டு செய்து வருகிறார்கள். இந்திய நாட் டின் பொதுத்துறை நிறுவனங் களை பாதுகாப்பது என்பது இந்த தேசத்தின் நலனை பாதுகாப்பதற்கு ஒப்பாகும். இந்த வெற்றி தொழிலாளி வர்க்கத்திற்கு எழுச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நாச கர கொள்கையில் ஈடுபடும் ஆளும் வர்க்கத்திற்கு எதிராக அனைத்து தரப்பு மக்களை திரட்டுகிற மகத்தான பணி யில் பிஎஸ்என்எல் ஊழியர் சங்க தோழர்கள் ஈடுபட வேண்டும் என்ற வேண்டு கோளோடு வாழ்த்துரையை நிறைவு செய்தார்.
இவ்வெற்றி விழாவை வாழ்த்தி கோவை நாடாளு மன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் அனுப்பிருந்த வாழ்த்து தந்தியை மாநில செயலாளர் எஸ்.செல்லப்பா வாசித்தார். விழாவில் உழைக் கும் மகளிர் ஒருங்கிணைப் புக் குழு தலைவர் வி.பி. இந்திரா, திப்பு தொழிற்சங்க மாநில நிர்வாகி கோவிந்த ராஜ், தமிழ்நாடு மாநில தொலை தொடர்பு ஒப்பந்த ஊழியர் சங்க மாநில செயலாளர் எ.வி. முருகையன், எப்.என்.பிஇஒ மாநில செயலாளர் ஆர்.வி. ஜெயராமன், சேவா பிஎஸ் என்எல் மாநிலச் செயலா ளர் பெருமாள் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினர். முன்னதாக, மாநில மாநாட்டு மலரை பொதுச் செயலாளர் அபிமன்யு வெளி யிட கோவை மாவட்ட சங்க செயலாளர் சி.ராஜேந் திரன் பெற்றுக்கொண்டார், நாகர்கோவில் மாவட்ட இணையதளத்தை அபி மன்யு துவக்கி வைத்தார். மேலும், உடுமலை துரையர சன் கலைநிகழ்ச்சி நடைபெற் றது. சிபிஎம் மாவட்ட செய லாளர் வி.இராமமூர்த்தி, சிஐடியு மாவட்டச் செயலா ளர் எஸ்.ஆறுமுகம், தமிழ் நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலாளர் யு.கே.சிவஞா னம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிறைவாக, பிஎஸ்என்எல் ஊழியர் சங் கத்தின் கோவை மாவட்ட செயலாளர் சி.ராஜேந்திரன் நன்றி கூறினார்.
–தீக்கதீர் 06/06/13
கோவை வெற்றி விழா நிகழ்ச்சிகள்
நடந்து முடிந்த ஆறாவது சங்க அங்கீகார தேர்தலில், தொடர்ந்து ஐந்தாவது முறையாக, அகில இந்திய அளவில் BSNL ஊழியர் சங்கம் வெற்றி பெற்றதை ஒட்டி, தமிழ் மாநிலச் சங்கத்தின் சார்பில், கோவை மாநகரில், பிரதான தொலைபேசியகத்தில் பிரம்மாண்டமான முறையில், 4.6.2013 அன்று வெற்றி விழா சிறப்புக் கூட்டம் நடைபெற்றது.
குமரி முதல் சென்னை வரை, ஆயிரம் பேருக்கு மேல் அணி திரண்ட இக்கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் தோழர். மாரிமுத்து தலைமை வகிக்க, CITU மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் தோழர். R.கருமலையான், நமது அகில இந்தியப் பொதுச் செயலாளர் தோழர். P.அபிமன்யூ, மாநிலச் செயலாளர் தோழர். S.செல்லப்பா, ஒப்பந்தத் தொழிலாளர் சங்க மாநிலச் செயலாளர் தோழர். M.முருகையா, மகளிர் ஒருங்கிணைப்புக் குழு அமைப்பாளர் தோழியர். P.இந்திரா மற்றும் கூட்டணி சங்கத் தலைவர்கள் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.
இக்கூட்டத்தில், நமது மாவட்டச் சங்கத்தின் இணையதளமான பாசறை- www.bsnleungc.com – அகில இந்திய பொதுச் செயலாளர் தோழர். அபிமன்யூவால் கூட்டத்தினரின் கரவொலிக்கிடையில் துவக்கி வைக்கப் பட்டது.
கோவைக்கு நமது மாவட்டத் தலைவர் தோழர். கணபதியாபிள்ளை, மாவட்டச் செயலர் தோழர். ஜார்ஜ் தலைமையில் 3 தோழியர் உட்பட 30 பேர் கலந்து கொண்டனர்.
- BSNLEU NGC.

Saturday, April 13, 2013

வெற்றி நிச்சயம்

எஸ். செல்லப்பா
--------------------------------
்ீ்்்்ி்் ்ட்்ு்ை


பிஎஸ்என்எல் நிறுவனத்தில் இதுவரை நடத்தப்பட்ட ஐந்து உறுப்பினர் சரிபார்ப்பு தேர் தல்களில், பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் தொடர்ந்து நான்கு முறை வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. தற்போது ஆறாவது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தல் ரகசிய வாக் கெடுப்பு மூலம் ஏப்ரல் 16, 2013 அன்று நடை பெற உள்ளது. இந்த தேர்தலில் 18 சங்கங்கள் போட்டியிட்டாலும், பிரதான போட்டி என்பது பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்திற்கும், என்எப் டிஇ (பிஎஸ்என்எல்) சங்கத்திற்கும் இடையே தான். பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் பிஎஸ் என்எல்-ல் உள்ள டிஇபியு, எஸ்இடபிள்யுஏ, பிஎஸ்என்எல், எப்என்டிஓபிஇஏ, பிஎஸ்என் எல்எம்எஸ்மற்றும்என்எப்டிபிஇஆகியசங்கங் களுடன் கூட்டணி வைத்து ‘செல்போன்’ சின்னத்தில் போட்டியிடுகிறது. என்எப்டிஇ சங்கம், எஸ்என்ஏடிடிஏ, பிஎஸ்என்எல் இஎஸ், பிஎஸ்என்எல் பிஇடபிள்யுஏ, ஏஐபி சிடிஇஎஸ் மற்றும் பிஎஸ்என்எல்இசி ஆகிய சங்கங்களுடன் கூட்டணி வைத்துள்ளது. இந்த தேர்தலில் இந்திய நாடு முழுவதும் பிஎஸ்என்எல்-ல் பணி புரியும் 2,04,796 ஊழி யர்கள் வாக்களிக்க உள்ளனர். இதில் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் உறுப்பினர் எண்ணிக்கை 1,15,000. (இதில் கூட்டணி சங்க உறுப்பினர்களின் எண் ணிக்கை சேர்க்கப்படவில்லை). ஆனால் என்எப்டிஇ சங்கத்தின் உறுப்பினர் எண் ணிக்கை 45,000க்கும் குறைவு தான். எனவே ஏப்ரல் 16 அன்று நடைபெற உள்ள 6-வது சங்க அங்கீகார தேர்தலிலும் பிஎஸ்என்எல் ஊழி யர் சங்கம் கம்பீரமாக வெற்றி பெற்று தொடர்ந்து ஐந்தாவது முறையாக தொடர் வெற்றி என்ற சாதனையை படைக்க உள்ளது. வெற்றி நிச்சயம்.
ஜனநாயகத்தின் பாதுகாவலன் : பிஎஸ்என்எல்-ல் ஒரே அங்கீகரிக்கப் பட்ட சங்கமான பிஎஸ்என்எல் ஊழியர் சங் கம், விகிதாச்சார அடிப்படையில் சங்க அங்கீ காரம் வழங்க வேண்டும் என்ற கோரிக் கையை நிர்வாகத்திடம் வைத்து போராடி வந்தது. பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று பிஎஸ்என்எல் நிறுவ னம், புதிய அங்கீகார விதிகளை உருவாக்கி உள்ளது. கடந்த ஐந்து சங்க அங்கீகார தேர்தல் களிலும் அதிக வாக்குகளை பெறும் ஒரே சங் கத்திற்கு மட்டும் அங்கீகாரம் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது நடைபெற உள்ள ஆறாவது சங்க அங்கீகார தேர்தலில், 50 சத விகிதத்திற்கும் மேல் ஒரு சங்கம் வாக்கு களை பெற்றது என்றால்/ ஒரே சங்கத்திற்கு மட்டுமே அங்கீகாரம் வழங்கப்படும். 50 சத விகித வாக்குகளை யாரும் பெறவில்லை என் றால், 35 சதமான வாக்குகளை பெறும் சங்கம் முதன்மை சங்கமாகவும், அடுத்து 15 சதமான வாக்குகளை பெறும் சங்கம் இரண்டாவது அங் கீகார சங்கமாகவும் அங்கீகரிக்கப்படுவார்கள். 2சதவிகித வாக்குகளை பெறும் சங்கங்க ளுக்கு சில தொழிற்சங்க சலுகைகள் வழங் கப்படும். ‘ஒரு தொழிலுக்கு ஒரு சங்கம் தான்’ என்று என்எப்டிஇ சங்கம் முதலில் முழங் கியது. இரண்டாவது தேர்தலில் தோற்கும் வரை இதைத்தான் பறைசாற்றியது. தேர் தலில் தோற்றவுடன், ‘இரண்டாவது சங்கத் திற்கும் அங்கீகாரம் கொடு’ என்று நிர்வாகத் துடன் மன்றாட ஆரம்பித்தது. ஆனால் பிஎஸ் என்எல் ஊழியர் சங்கம் தான் முதலில் இருந்தே, தொடர்ந்து விகிதாச்சார பிரதிநிதித்துவத்தை வழங்க வேண்டும் என கொள்கை அடிப்படை யில் நின்று போராடி வெற்றியும் பெற்றுள்ளது. எனவே ஜனநாயகத்தின் பாதுகாவலன் பிஎஸ் என்எல் ஊழியர் சங்கம் தான்.
பிஎஸ்என்எல்-ன் பாதுகாவலன் : கார்ப்பரேட் நிறுவனங்களின், தனியார் முத லாளிகளின் கட்டுப்பாட்டில் இந்திய அர சாங்கம் இயங்குகிறது. இவர்களின் கட்ட ளைக்கு அடிபணிந்து பொதுத்துறை நிறுவ னங்களை இந்திய ஆட்சியாளர்கள் சூறை யாடுகின்றனர். ’புதிய தாராளமய பொருளாதார கொள்கை’ என்ற பெயரில் இந்திய ஆட்சி யாளர்கள் பொதுத்துறைகளை தனியாருக்கு தாரை வார்க்கின்றனர். தனியாரை ஊக்கு வித்து, பொதுத்துறைகளை நஷ்டமாக்கி பின் தனியாரை கேந்திர பங்குதாரராக (ளவசயவநபiஉ யீயசவநேச) மாற்றி அவர்களுக்கு இந்த பொதுத் துறைகளை விற்கும் புதிய யுக்தியை கடைப் பிடிக்கின்றனர். இரண்டரை லட்சம் கோடி சொத்து மதிப்பு கொண்ட பிஎஸ்என்எல் என்ற பிரம்மாண்டமான பொதுத்துறை நிறுவனம் 10,000 கோடி ரூபாய்க்கு இந்த ஆண்டு நஷ் டம் ஏற்படுவதற்கு அரசின் இந்த கொள்கை கள் தான் காரணம். அரசின் அனைத்து தொலை தொடர்பு கொள்கைகளும், என்டிபி 1995, என்டிபி 1999, என்டிபி 2005 மற்றும் என்டிபி 2012 ஆகிய அனைத்துமே தனியார் நிறுவனங்கள் கொழுக் கவும், பிஎஸ்என்எல் நிறுவனத்தை நலிவ டையுமே செய்துள்ளன. இப்படிப்பட்ட அரசின் கொள்கைகளை எதிர்த்து 1991 முதல் பிப்ரவரி 2013 வரை நடை பெற்ற அனைத்து 15 தேசிய பொது வேலை நிறுத்தங்களிலும் பங்கேற்ற பெருமை பிஎஸ் என்எல் ஊழியர் சங்கத்திற்கு மட்டுமே உண்டு. கடந்த காலங்களில் என்எப்டிஇ சங் கம் இது போன்ற போராட்டங்களில் ஒதுங்கி நிற்கும். தலமட்டங்களுக்கேற்ப முடிவு செய் யுங்கள் என்று என்எப்டிஇ சங்கத்தின் அகில இந்திய தலைமை உபதேசம் செய்யும். தொடர்ந்து நாம் வேலை நிறுத்தங்களில் பங் கேற்றதால் ஏற்பட்ட தாக்கத்தின் காரணமாக சமீபத்திய வேலை நிறுத்தத்தில் பங்கேற்க என்எப்டிஇ சங்கத்தின் அகில இந்திய தலைமை அறிவிப்பாவது வெளியிட்டது. மெல்ல பிஎஸ்என்எல் மடியும் என்று மனப் பால் குடித்த ஆட்சியாளர்களின் மனக் கோட்டை தகரும் வண்ணம், பிஎஸ்என்எல்-ஐ உயிரைக் கொடுத்தும் காத்திடுவோம் என ஊழியர்களையும், அதிகாரிகளையும், உடலை சிலிர்ப்பி, நெஞ்சுயர்த்தி நின்று போராட்ட களத்தில் போராடச்செய்தது பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் தான். இப்படிப்பட்ட வரலாறு ஏதாவது என்எப்டிஇ சங்கத்திற்கு உண்டா? இல்லை. இல்லவே இல்லை. ஏனெனில், ‘அரசாங்கத்தின் கொள்கை முடிவுகளை எதிர்க்க முடியாது’ என்பதே என்எப்டிஇ சங் கத்தின் கொள்கை முழக்கமாகும். உதாரணமாக தொலை தொடர்புத்துறையை கார்ப்பரேஷனாக மாற்ற வேண்டும் என்பது அரசாங்கத்தின் கொள்கை முடிவாகும். என் எப்டிஇ சங்கம் அரசின் இந்த முடிவுக்கு ஆதர வாக நின்று தொலை தொடர்புத் துறையை கார்ப்பரேஷனாக மாற்ற வேண்டும் என்று செப்டம்பர் 2000ல் வேலை நிறுத்தம் செய்தது. கார்ப்பரேஷன் என்பது தனியார்மயத்தின் முதல் படி என்று ஊழியர்களிடம் விளக்கி கார்ப்பரேஷன் கூடாது என்று வேலை நிறுத்த போராட்டங்களை நடத்தியது பிஎஸ் என்எல் ஊழியர் சங்க தலைமை. ஆனால் ராஜாவை மிஞ்சிய ராஜ விசுவாசிகளாக என்எப்டிஇ சங்கம் செயல்பட்டதால் பிஎஸ் என்எல் நிறுவனத்தை அரசால் எளிதாக உரு வாக்க முடிந்தது. “பிஎஸ்என்எல் நிறுவனத் தின் ஐம்பது சதவிகித பங்குகள் விற்கப்பட் டால், ஊழியர்”களை மூன்று மாதம் ஊதியம் கொடுத்து (ஹசவiஉடந 25 சூ, ஐனு ஹஉவ 1947) வீட் டுக்கு அனுப்ப வேண்டும்” என கார்ப்பரேஷ னாக மாற்றும் போது உடன்பாடு போட்டது அன்றைக்கு அங்கீகாரம் பெற்றிருந்த என்எப் டிஇ தலைமை. இதுஎன்எப்டிஇ-யால் மறை க்கவும் முடியாது. ஊழியர்களால் மன்னிக்க வும் முடியாது.
பாஜக- ஐ.மு.கூட்டணி வித்தியாசம் ஏதும் இல்லை : முந்தைய பாஜக ஆட்சியில் ஜக்மோகன் தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்தார். தனியார் தொலை தொடர்பு நிறுவனங்கள் அமைச்சரை சந்தித்து ‘இந்திய அரசாங்கத் திற்கு லைசென்ஸ் முறையில் கட்டணம் செலுத்துவதில் சிரமம் உள்ளது, வருவாய் பங்கீடு (சுநஎநரேந ளாயசiபே) முறையில் கட்டணம் செலுத்துகிறோம்’ என்று மகஜர் கொடுத்தனர். “கட்டண முறையை மாற்றினால் அரசுக்கு 50,000 கோடி ரூபாய்கள் நஷ்டம் ஏற்படும். பிஎஸ்என்எல் நஷ்டம் அடையும்” என்பதால் ஜக்மோகன் மறுத்தார். தனியார் கம்பெனிகள் பாரத பிரதமர் வாஜ்பாயை பார்த்தனர். பாரத பிரதமர் தனியார் கம்பெனிகளின் கோரிக் கையை ஏற்றுக் கொண்டார். இந்திய அரசுக்கு 50,000 கோடி ரூபாய்கள் இழப்பு ஏற்பட்டது. அதோடு தொலைத் தொடர்பு அமைச்சர் பொறுப்பிலிருந்து ஜக்மோகன் தூக்கியடிக் கப்பட்டார். தனியார்களின் செல்வாக்கு புரிகிறதா? ஐ.மு.கூட்டணிஅரசாங்கத்தின்நிதியமைச்சராக பிரணாப்முகர்ஜி இருந்த போது, வோடோ போன்நிறுவனம்2007ஆம்ஆண்டு7,000கோடி ரூபாய்கள் வரி ஏய்ப்பு செய்துள்ளது என்ற வரு மான வரித்துறை (ஐnஉடிஅந கூயஒ) குறிப்பினை ஏற் றார். 4,000 கோடி அபராதத்துடன், 11,000 கோடி ரூபாய்களை கட்ட வேண்டும் என வோடா போன் நிறுவனத்திற்கு நோட்டீஸ் கொடுத்தார். வோடாபோன் 11,000 கோடியை கட்ட மறுத்தது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. உச்சநீதிமன்றமோ ‘முன் தேதி யிட்டு வரிபிடித்தம் செய்ய வருமானவரித் துறையின் சட்டங்களில் இடம் இல்லை’ என்று கூறியது. பிரணாப் முகர்ஜி நாடாளு மன்றத்தில் வருமான வரி சட்டத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என கூறினார். வோ டோபோன், பிரதமரை சந்தித்து முறையிட்டது. காங்கிரஸ் கட்சியும் சமயம் பார்த்து தனியார் கம்பெனிகளுக்கு எப்போதும் ஆதரவளித்து வரும் சிதம்பரத்தை நிதி அமைச்சராகவும், கபில் சிபலை தொலை தொடர்புத்துறை அமைச்சராகவும் மாற்றியது. பின்பு ’பார்த்த சாரதி ஷோம்’ தலைமையில் ஒரு கமிட்டி போட்டு வோடோபோன் நிறுவனம் 11,000 கோடி ரூபாய்களை கட்டாமல் பார்த்துக் கொண்டனர். பன்னாட்டு பகாசுர கம்பெனி களின் பலம் புரிகிறதா?ஆனால் பிஎஸ்என்எல் என்ற பொதுத் துறை நிறுவனத்திலிருந்து பிடபிள்யுஏ ஸ்பெக்ட்ரம் கட்டணம் என்றும் லைசென்ஸ் கட்டணம் என்ற வகையிலும், 18,500 கோடி ரூபாய்களை இந்திய அரசாங்கம் எடுத்துக் கொண்டது. பிஎஸ்என்எல் நிறுவனம் கை யிருப்பு இல்லாமல் தவிக்கிறது. இதையெல்லாம் எதிர்த்து தான் பிஎஸ் என்எல் ஊழியர் சங்கம், அதிகாரிகளையும் ஊழியர்களையும் ஒன்று படுத்தி “FORUM OF BSNL UNIONS/ASSOCIATIONS OF EXECUTIVES / NON EXECUTIVES” என்ற அமைப்பின் மூலமாக தொடர்ந்து போராடி வருகிறது.
காப்பர் கேபிளை காத்தோம் : பிஎஸ்என்எல்-ன் மார்க்கெட் ஷேர் செல் போன் சேவையில் 11சதவீதமாகவும், ப்ராட் பேண்ட் சேவையில் 65ஆகவும் இருக்கிறது என்று சமீபத்தில் தொலை தொடர்பு அமைச் சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். ப்ராட் பேண்ட் சேவைக்கு மிகவும் அத்தியாவசிய தேவையான கேபிள்களை தனியாருக்கு தாரை வார்க்க அரசு முயற்சித்தபோது, பிஎஸ் என்எல் ஊழியர் சங்கம் அதிகாரிகளின் சங் கங்களையும் ஊழியர்களையும் இணைத்துக் கொண்டு 2006ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் நாள் வேலை நிறுத்தம் செய்ய அறைகூவல் விடுத்தது. அதனால் மத்திய அரசு பேச்சு வார்த்தை நடத்தி கேபிளை தனியாருக்கு விடும் திட்டத்தை கைவிட்டு தோழர் நம்பூதி ரியிடம் ஒப்பந்தம் போட்டது. இதன் காரண மாகத்தான் இன்று ப்ராட் பேண்ட் சேவையில் பிஎஸ்என்எல் நிறுவனம் முதலிடத்தை வகிக்கிறது.
பங்கு விற்பனை : பிஎஸ்என்எல்-ன் பங்குகள் விற்பனை செய்வதை பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் கடுமையாக எதிர்த்து போராடி தடுத்து வரு கிறது. ஆனால் என்எப்டிஇ சங்கம் ‘50சத வீதப் பங்குகள் விற்றாலும் பரவாயில்லை. பென்சன் வேண்டும்’ என்றே பிரச்சாரம் செய் கிறது. அங்கீகரிக்கப்பட்ட எட்டு ஆண்டு களில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ஒரு சத விகித பங்குகளை கூட விற்க விடாமல் தடுத்த பெருமை பிஎஸ்என்எல் ஊழியர் சங் கத்திற்கு மட்டுமே உண்டு.
விருப்ப ஓய்வுத் திட்டம் : முதல் சங்க அங்கீகார தேர்தலுக்கு பின் னர் பிஎஸ்என்எல்-ல் உள்ள 50,000 ஊழியர் களை விருப்ப ஓய்வு திட்டத்தின் மூலம் வீட் டுக்கு அனுப்பலாம என்கின்ற நிர்வாகத்தின் முன்மொழிவினை என்எப்டிஇ சங்கம் ஏற்றுக் கொண்டது. அதனை நியாயபடுத்தும் வகை யில், இது விருப்ப ஓய்வு திட்டம் கிடையாது. விருப்ப மாற்றியமைக்கும் திட்டம் என்று வியாக்கியானம் பேசியது. ஆனால் பிஎஸ்என் எல் ஊழியர் சங்கம் இரண்டாவது சங்க அங் கீகார தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் கடு மையான எதிர்ப்பின் மூலம் அதனை முறி யடித்தோம். அதே போல 2012ஆம் ஆண்டு, மன்மோகன் சிங் நியமித்த சாம் பிட்ரோடா கமிட்டியும், ஒரு லட்சம் ஊழியர்களை வீட் டுக்கு அனுப்ப வேண்டும் என தெரிவித்தது. ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் ஒன்று பட்ட போராட்டங்கள் மூலமாக அரசின் முயற் சிகளை எல்லாம் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் தொடர்ந்து முறியடித்து வந்துள்ளது.என்எப்டிஇ சங்கம் 25 ஆண்டு காலத் திற்கு முன்பு போட்ட பதவி உயர்வு திட்டத்தை பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் மாற்றி புதிய பதவி உயர்வு திட்டத்தை புகுத்தியது. 98 சதவிகித ஊழியர்களுக்கு பல பத்தாயிரக் கணக்கான ரூபாய்கள் நிலுவைத் தொகையாகவும் பெற்றுத் தந்தது பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் தான். பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு தொடர்ந்து அரசு பென்சன் வழங்கப்படுவதை உறுதி செய்தது பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம். அது மட்டுமல்லாமல் ஐடிஏ ஊதிய விகிதத் தில் பென்சன் மாற்றம் செய்ய முடியாது என்று இருந்ததை மாற்றி அமைத்தது பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம்.
ஒப்பந்த ஊழியர்கள் : பிஎஸ்என்எல் நிறுவனத்தில் ஒரு லட்சம் ஒப்பந்த ஊழியர்கள் உள்ளனர். இவர்களை நிர் வாகம் சுரண்டுவதை தடுக்க ஒப்பந்த ஊழி யருக்கான அகில இந்திய/ மாநில அமைப்பு களை உருவாக்கி பிஎஸ்என்எல் ஊழியர் சங் கம் தொடர்ந்து போராடி வருகிறது. தமிழகத் தில் 14 ஆண்டுகளாக ஒப்பந்த ஊழியர்களை திரட்டி மாநில சங்கம் அமைத்து, அவர்களின் முன்னேற்றத்திற்காக போராடி வருகிறது. அதன் விளைவாக ஒப்பந்த ஊழியர்களுக்கு தொழிலாளர் நல அமைச்சகம் வெளியிட்ட உத் தரவின் படி ஊதியம் பெற்றுத் தந்துள்ளோம். அவர்களுக்கான சட்ட சலுகைகள் அமலாக் கப்பட்டு வருகின்றன. அவர்களின் நிரந் தரத்திற்காக தொடர்ந்து போராடி வருகிறோம்.ஒடுக்கப்பட்டோருக்கு ஆதரவாகஇந்திய நாட்டில் பல நூற்றாண்டு காலமாக ஒடுக்கப்பட்டு வரும் தலித் மக்களுக்கெதி ரான கொடுமைகளுக்கு எதிராக போராடி வரும் தமிழக தீண்டாமை ஒழிப்பு முன்னணி யில் அங்கம் வகிப்பதோடு, அவர்களுக்கு ஆத ரவாக பல இயக்கங்களையும் நடத்தி வருகி றோம். தர்மபுரியில் தாக்குதலுக்கு உள்ளான தலித் மக்களுக்கு வழக்கு நிதியாகவும் ஒரு லட்ச ரூபாயினை தீண்டாமை ஒழிப்பு முன்ன ணிக்கு வழங்கியும் உள்ளது பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம். பிஎஸ்என்எல் நிறுவனத்தை பாதுகாக்க தொடர்ந்து போராடுவது... ஊழியர் நலனில் அக்கறை..... சமுதாய பார்வையோடு செயல் படுவது......தேசத்தை பாதுகாக்கும் போராட்டத் தில் உழைக்கும் வர்க்கத்தோடு இணைந்து போராடுவது..... என பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் வாக்குறுதி அளிக்கிறது. 50 சதவிகிதத்திற்கும் மேல் வாக்குகளைப் பெற்று பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் வெற்றி பெறப்போவது நிச்சயம். இன்னமும் அதிக மான வாக்குகளை பெற்று பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தை வெற்றி பெற செய்யவேண் டுமென பிஎஸ்என்எல் ஊழியர்களை தோழ மையுடன் கேட்டுக் கொள்கிறோம். கட்டுரையாளர், மாநிலச் செயலாளர்.பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம், தமிழ் மாநிலம்.


Tuesday, April 9, 2013

இப்படை தோற்கின் எப்படை வெல்லும்

கோவை மாவட்ட தேர்தல் சிறப்பு கூட்டத்தின் புகைப்படம் ,வீடியோ உதவி தோழர் அண்ணாத்துரை பி பி புதூர்

இப்படை தோற்கின் எப்படை வெல்லும் !
கோவையில் நடைபெற்ற UNITED FORUM சங்கங்கங்களின் தேர்தல் சிறப்புக்கூட்டத்தில் மாவட்ட முழுவதிலும் இருந்து 350க்கும் மேற்பட்ட பெண் தோழியர்கள் உட்பட 1000க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.அலைகடலென திரண்டு இருந்த கூட்டத்தை பார்த்த தலைவர்கள .இந்தக்கூட்டம் நமது சாதனைக்கு கிடைத்த அங்கீகாரம் என்றும், இபொழுதே நமது வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் ,நமது வெற்றியில் என்றைக்கும் கோவைக்கு என்று ஒரு தனிச்சிறப்பு உண்டு என்று பெருமிதப்பட்டார்கள். கீழே புகைப்படங்கள் சிலவற்றை தந்துள்ளோம்