Thursday, August 1, 2013

திருப்பூரில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் கோரிக்கை ஆர்ப்பாட்டம்


திருப்பூர், ஜூலை 30-பிஎஸ்என்எல் நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்களின் நிறைவேற்றப்படாத கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி திருப்பூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருப்பூர் மெயின் தொலைபேசி நிலையம் முன்பாக செவ்வாயன்று நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கிளைத் தலைவர் வாலீசன் தலைமை வகித்தார். இதில் போராட்டத்தை வாழ்த்தி சிஐடியு திருப்பூர் மாவட்டச் செயலாளர் எம்.சந்திரன் பேசினார். பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் மாநில அமைப்புச் செயலாளர் .முகமது ஜாபர் உள்ளிட்டோர் உரையாற்றினர். இதில் சங்க நிர்வாகி எஸ்.சுப்பிரமணியம் உள்பட பலர் திரளாகக் கலந்து கொண்டனர்.