Wednesday, August 14, 2013



 செய்தியும் புகைபடமும்
ஜெய்வாபாய் ஈஸ்வரன் அவர்கள்


இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு, திருப்பூர் தொலைபேசி நிலையத்தில் பின்னல் புத்தகாலயம் சார்பாக இன்று நடைபெற்ற புத்தக கண்காட்சியை வாழ்த்தி, நஞ்சப்பா ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியர் திருமதி.சரசுவதி அவர்கள் பேசுகிறார்...சுவாமி விவேகானந்தர் கூறுவார்.. “ முகமது மலையைத்தேடி செல்ல வேண்டும்.. அப்படி செல்லாவிட்டால் மலை முகமதுவைத்தேடி வரவேண்டும்” என்பார்.. அது போல மக்கள் புத்தகம் வாங்க கடைகளுக்கு செல்லவேண்டும்..செல்லாவிட்டால்... புத்தகக்கடையே தொலைபேசி நிலையத்திற்கு வரவேண்டும்... திருப்பூர் மாவட்டத்தில் 50 இடங்களில் புத்தகம் மக்களை நோக்கி படையெடுக்கிறது...