Thursday, July 25, 2013

தீக்கதிர் செய்தி


ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்திடுக







மே.பாளையம், ஜூலை 24-பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்திரம் செய்திட வேண்டும் என்று தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் கோவை மாவட்ட மாநாடு வலியுறுத்தியுள்ளது.தமிழ்நாடு தொலைதொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் கோவை மாவட்ட 5 வது மாநாடு மேட்டுப்பாளையத்தில் உள்ள கல்பனா திருமண மண்டபத்தில் ஞாயிறன்று நடைபெற்றது, இம்மாநாட்டிற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் என்.பி.இராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் எம்.முத்துக்குமார், மாநாட்டு வரவேற்புக்குழு செயலாளர் எம்.பி.வடிவேல் ஆகியோர் வரவேற்புரையாற்றினர். முன்னதாக, தேசியக் கொடியை டி.ஆர்.ராசப்பன் மற்றும் சங்க கொடியை எஸ்.சண்முகசுந்தரமும் ஏற்றி வைத்தனர். மாவட்ட அமைப்பு செயலாளர் சம்பத் தலைமையில் மறைந்த தலைவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதையடுத்து, மாநாட்டை துவக்கி வைத்தும், சுந்தரக்கண்ணன் என்பவரால் வடிவமைக்கப்பட்டிருந்த ஒப்பந்த ஊழியர்களுக்கான கோவை மாவட்ட இணையதளத்தை (http://tntcwucbt.blogspot.in) துவக்கி வைத்தும் சங்கத்தின் மாநிலச் செயலாளர் எம்.முருகையா உரையாற்றினார்.இம்மாநாட்டை வாழ்த்தி மாநில பொருளாளர் கே.விஸ்வநாதன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் கே.ஜே.ராஜாமணி, சுந்தரக்கண்ணன், பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் சி.ராஜேந்திரன், மாநில உதவித் தலைவர் வி.வெங்கட்ராமன், மாநில உதவிச் செயலாளர் எஸ்.சுப்ரமணியம், மாநில அமைப்பு செயலாளர் ஏ.முகமது ஜாபர் ஆகியோர் பேசினர்.தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலாளர் யு.கே.சிவஞானம், சிபிஎம் தாலுகா செயலாளர் சி.பெருமாள், பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாநிலத் தலைவர் மாரிமுத்து ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
புதிய நிர்வாகிகள்
இம்மாநாட்டில், தொலைத் தொடர்புத் துறையில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. இதில் தலைவராக எம்.முத்துக்குமார், செயலாளராக டி.ரவிச்சந்திரன், பொருளாளராக கே.கருப்புசாமி மற்றும் 19 பேர்களை கொண்ட புதிய நிர்வாக கமிட்டி தேர்ந்தெடுக்கப்பட்டது. இம்மாநாட்டில், 400க்கு மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Monday, July 22, 2013

CIRCULAR


http://www.scribd.com/doc/155445263/Cbe-Circular-50

Thursday, July 4, 2013

என்எல்சி பங்கு விற்பனையைக் கண்டித்து பிஎஸ்என்எல்-எல்ஐசி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


என்எல்சி பங்கு விற்பனையைக் கண்டித்து பிஎஸ்என்எல்-எல்ஐசி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் -------------------------------------------------------------------------------- திருப்பூர், ஜூலை 4- நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் (என்எல்சி) பங்குகளை விற்பனை செய்யும் மத்திய அரசின் முடிவை கைவிட வலியுறுத்தி எல்ஐசி மற்றும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.நெய்வேலி என்எல்சி பொதுத்துறை நிறுவனப் பங்குகளை விற்பனை செய்வதென்ற மத்திய அரசின் முடிவைக் கண்டித்து தொலைத் தொடர்பு ஊழியர் அதிகாரிகள் சங்கக் கூட்டமைப்பு சார்பில் திருப்பூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்பூர் மெயின் தொலைபேசி நிலையம் முன்பாக புதன்கிழமை நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு எஸ்என்இஏ சங்கத்தைச் சேர்ந்த பழனிவேல்சாமி தலைமை வகித்தார். பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாநில அமைப்புச் செயலாளர் ஏ.முகமது ஜாபர், என்எப்டிஇ சங்கத் தலைவர்களில் ஒருவரான ஜெகநாதன், எப்என்டிஓ சங்க நிர்வாகி தனபதி, ஏடிபி சார்பில் ஜான் சாமுவேல் ஆகியோர் மத்திய அரசின் பொதுத்துறை பங்கு விற்பனை முடிவைக் கண்டித்து உரையாற்றினர். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நிறைவாக கணக்குத்துறை அதிகாரிகள் சங்கத்தைச் சேர்ந்த கேசவன் நன்றி கூறினார். கோவை பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி பங்குகளை தனியாருக்கு விற்க முயலும் மத்திய அரசை கண்டித்து தொலைதொடர்பு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கோவை மெயின் எக்ஜேஞ் அருகில் வியாழனன்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பி.எஸ்.என்.எல்.யு வின் மாவட்ட செயலாளர் சி.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். என்.எப்.டி சங்கத்தின் சார்பில் ராமகிருஷ்ணன், எஸ்.என்.இ.ஏ வின் பிரசன்னா, அதிகாரி சங்கங்களின் சார்பில் உஸ்மான் அலி, பி.எஸ்.என்.எல்.யு சார்பில் வெங்கட்ராமன் ஆகியோர் கோரிக்கை விளக்கி பேசினர். நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தின் முடிவில் கே.சந்திரசேகரன் நன்றி கூறினார். உதகை அகில இந்திய காப்பீட்டுக் கழக ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் உதகையில் புதனன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் நாகேசுவரன் தலைமை தாங்கினார். முகவர்கள் சங்கத்தின் நிர்வாகி ஜெயபால் வாழ்த்துரை வழங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் எல்ஐசி ஊழியர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு, பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயப்படுத்தும் மத்திய அரசின் நடவடிக்கைகளை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். நிறைவாக எல்ஐசி ஊழியர் சங்கத்தின் செயலாளர் கோபால் நன்றி கூறினார்.