Sunday, November 28, 2010

ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு எதிரான ஆர்பாட்டம்


Bharat Sanchar Nigam Limited Employees Union stage a demonstration in front of BSNL deputy general manager's office in Tirupur on Saturday. –

Tirupur: Telecom employees, affiliated to Bharat Sanchar Nigam Limited Employees Union (BSNLEU), have demanded immediate cancellation of licenses given to all non-telecom companies during the 2G spectrum allocation, among other issues.

To highlight the demands, the staff staged a demonstration in front of the BSNL deputy general manager's office here on Saturday.

BSNLEU circle organising secretary Mohammed Jaffer said that the Union Government should conduct an impartial inquiry into the allegations pertaining to spectrum allocation to bring out the truth behind it.

“Apart from cancelling the licenses of non-telecom companies who got benefitted in the 2G deal, the government should recover the difference amount in the valuation of spectrum from the other companies,” he added.





-
-
-
-
-
-
2ஜி ஊழல்: இழப்புகளை கைப்பற்றுக!
-----------------------------------------------
-பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்
---------------------------------------------------
மிகப் பிரம்மாண்டமான அளவில் நடை பெற்றுள்ள 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலின் விவரங் கள் வெளிவந்துகொண்டிருக்கக்கூடிய சூழ லில், அதனை விசாரிப்பதற்காக கூட்டு நாடா ளுமன்றக் குழுவை அமைத்திட வேண்டு மென்கிற கோரிக்கை தொடர்பாக நாடாளுமன் றத்தில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ள நிலை எப்படித் தீர்வு செய்யப்பட்டாலும், நாடு சட்ட விரோத முதலாளித்துவத்தின் (உசடிலே உயயீவையடளைஅ) ஆழமான பகுதிக்குள் மேலும் மேலும் தள் ளப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பது தெளிவு.

சட்டவிரோத முதலாளித்துவம் என்றால் என்ன? மூலதனம், லாபத்தை உச்சத்திற்குக் கொண்டு செல்ல வேண்டுமென்கிற அரிப் பின் காரணமாக, நாட்டில் உள்ள அனைத்து விதிமுறைகளும் சற்றே வளைந்து கொடுக்க வேண்டும் என்று விரும்பும். அவ்வாறு அவை வளைந்து கொடுக்காவிட்டால் அவற்றை மீறும். ஒப்பந்தங்களை அளிப்பதில் உற்றார் உறவினர்களுக்கு உதவுவது, (உதாரணமாக, பொதுத்துறை நிறுவனங்களான பால்கோ மற்றும் மும்பை, ஜூஹூ, செண்டார் ஓட் டலை முந்தைய தேசிய ஜனநாயகக் கூட் டணி அரசாங்கம் அடிமாட்டு விலைக்குத் தாரை வார்த்தமை போன்று) நாட்டின் பொதுச் சொத்துக்களை இதயத்திற்கு இதமானவர் களுக்குத் தர முன் வருவது, பணத்தைப் பன் மடங்கு பெருக்குவதற்காக சட்டவிரோத வழிவகைகளைக் கண்டறிவது மற்றும் பொதுச் சொத்துக்களைச் சூறையாடுவது முத லியன சட்டவிரோத முதலாளித்துவத்தின் ஒருசில வடிவங்களாகும். முதலாளித்துவ அரசு, முதலாளிகள் சரிசமமாக போட்டி போட் டுக்கொண்டு இயங்குவதற்காக ஒருசில விதிமுறைகளையும் அவற்றை செயல்படுத் தும் நிறுவன ஏற்பாடுகளையும் மேற்கொள் கிறது. ஆயினும் சிறிய மீன்களை பெரிய மீன் கள் தின்பதைப் போன்ற அடிப்படையிலேயே இயற்கை குணத்தைக் கொண்டுள்ள முதலா ளித்துவம், இத்தகு விதிமுறைகளையெல் லாம் தூக்கிக் குப்பையில் வீசி எறிந்துவிடு கிறது. முதலாளித்துவம் என்பது இயல்பா கவே சட்டவிரோதமான நடவடிக்கைகளை ஊட்டி வளர்க்கிறது.

இந்தியா போன்ற நாடுகளில் உலக முத லாளித்துவம் தாமதமாக நுழைந்தபோது (குறிப்பாக அவை உலகமயம் என்னும் நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளைத் தழுவிக்கொண்ட பின்பு) இத்தகைய சட்ட விரோத நடவடிக்கைகள் அரசாங்கத்தின் நிறு வனங்களிலும் ஊடுருவிப் பரவின. உண்மை யில் ஒட்டுமொத்த அரசாங்கமே அவ்வாறு மாறிப்போனது.

உச்ச நீதிமன்றம், பிரதமரையும் அவரது அலுவலகத்தையும் கூண்டில் ஏற்றக்கூடிய அளவிற்கு நடைபெற்றுள்ள 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் அதன் வெளிப்பாடுதான்.

சட்டவிரோத முதலாளித்துவம், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் எந்த அளவிற்கு செயல் பட்டிருக்கிறது, எப்படிச் செயல்பட்டிருக் கிறது என்பதைச் சற்றே விளக்கிடலாம்.

2008 ஜனவரியில் 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றைகளை வெளியிடுவதற்கான உரிமங்களை அளிப்பதற்கு மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகமானது முற்றிலும் விந்தையான, எவருக்கும் விளக்கமுடியாத ஒரு விதியைக் கையாண்டது. அதாவது ‘முத லில் வருபவருக்கு முதலில் விநியோகிப்பது’ என்ற முறையைக் கொண்டு வந்தது. அது மட்டுமல்ல, அந்த 2ஜி உரிமங்களை 2001இல் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கே தருவது என் றும் முடிவு செய்தது. நுகர்வோருக்கு ஸ்பெக்ட் ரம் அதிக விலையுள்ளதாக ஆகிவிடக் கூடாது என்பதற்காகவும், அதன்மூலம் கிடைக்கும் ஆதாயங்கள் நுகர்வோரைச் சென் றடைய வேண்டும் என்பதற்காகவும் அவ் வாறு முடிவு மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சகம் அதற்கு விளக்கம் அளித்தது. ஆனால், உரிமங்கள் அளிப்பதற்கான விதி முறைகள் மற்றும் நிபந்தனைகள் மூலமாக இவற்றை உத்தரவாதம் செய்திடவில்லை. விளைவு, உரிமங்களைப் பெற்ற நபர்கள் இவற்றை மிகவும் கொள்ளை லாபத்திற்கு விற்றனர்.

ஐக்கிய அரபுக் குடியரசைச் சேர்ந்த டெலி காம் நிறுவனமான எடிசலாட் (நுவளையடயவ)டிற் கும், மும்பையைத் தளமாகக் கொண்டு இயங்கும் ஸ்வான் டெலிகாம் நிறுவனத்திற் கும் இடையேயான பேரம் மிகவும் பிரம்மாண் டமான தொகைக்கு நடைபெற்றிருக்கிறது. ஸ்வான் டெலிகாம் நிறுவனமானது 13 மாநி லங்களுக்கு (உசைஉடநள) உரிய உரிமங்களை வெறும் 1,537 கோடி ரூபாய்க்கு வாங்கியது. பின் னர், இதில் எவ்விதமான உட்கட்டமைப்பு வசதியையும் செய்யாமலேயே, இவற்றில் 45 விழுக்காட்டினை எடிசலாட் நிறுவனத்திற்கு 900 மில்லியன் அமெரிக்க டாலருக்கு (சுமார் 4,000 கோடி ரூபாய்க்கு) விற்றுவிட்டது. எனவே இவ்வாறு ஸ்பெக்ட்ரம் அலைக்கற் றையின் அப்போதைய சந்தை விலையாக சுமார் 2 பில்லியன் டாலர் இருந்திருக்கிறது. ஆனால் அதற்கு ஸ்வான் கொடுத்த விலை வெறும் 300 மில்லியன் டாலர்களேயாகும். தற்போதைய பரிவர்த்தனை விகிதாசாரத்தின் படி, இதன் பொருள் என்னவெனில் ஸ்வான் நிறுவனம் 2008 ஜனவரியில் கொடுத்த தொகைக்கு, அதைவிட 5.9 மடங்கு அதிக மதிப்புள்ள அலைக்கற்றைகளைப் பெற்றிருக் கிறது என்பதாகும். இவ்வாறு ஸ்வான் நிறு வனம் தான் பெற்ற உரிமங்களைச் செயல் படுத்த ஒரு காசு கூட செலவழிக்காமல், கொள்ளை லாபத்தை ஈட்டியிருக்கிறது. ஆனால் அதே சமயத்தில் அரசாங்கம் தான் பெற வேண்டிய தொகையில் ஆறில் ஒரு பங்கினை மட்டும் பெற்றது. இவ்வாறு அரசின் கஜானாவிற்கு வரவேண்டிய தொகையில் 4,500 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது.

இழப்பு என்பது இதோடு நின்றுவிடவில் லை. இந்த இழப்பு கூட குறைந்த மதிப்பீடு தான். இதனை இதற்கு அடுத்து நடைபெற் றுள்ள யூனிடெக் - டெலினார்(நார்வே) பேரத் துடன் ஒப்பிட்டால் தெரிந்து கொள்ள முடியும். யூனிடெக் நிறுவனமும், ஸ்வான் நிறுவனம் போன்றே உரிமத்தை நிறைவேற்றுவதற்காக ஒரு காசு கூட செலவழிக்கவில்லை. யூனி டெக் நிறுவனம் தான் பெற்ற 23 மாநிலங்களுக் கான உரிமங்களுக்கும் வெறும் 1651 கோடி ரூபாய் உரிமக் கட்டணமாகக் கொடுத்திருந் தது. பின்னர் இது டெலினார் நிறுவனத்திற்கு தான் பெற்றதில் 60 விழுக்காட்டு பங்குகளை மட்டும் 6,120 கோடி ரூபாய்க்கு விற்றுள்ளது. இவ்வாறு யூனிடெக் நிறுவனம் அரசுக்கு அளித்ததைவிட ஏழு மடங்கு அளவிலான தொகையைப் பெற்றிருக்கிறது.

இவ்வாறு ‘முதலில் வருபவருக்கு முத லில் விநியோகிப்பது’ என்ற அடிப்படையில் உரிமங்களைப் பெற்ற நிறுவனங்கள் உண்மை யில் டெலிகாம் வணிகத்துடன் தொடர்புள்ள வைகள் அல்ல. இவை இதற்கு முன் அறியப் படாத அல்லது பெயரளவிலான நிழல் நிறு வனங்களாகும். இதுவும் இந்நிறுவனங்களின் நம்பகத்தன்மைகள் (bடியே கனைநள) குறித்து ஐயங்களை எழுப்பின.

எனவேதான் நாட்டின் நலன் கருதி, இவ் வாறு நடைபெற்றுள்ள இமாலய அளவு ஊழல் குறித்து முழுமையாக விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியம் என்று கூறுகிறோம். அதற்காகக் கூட்டு நாடாளுமன்றக் குழு அமைக்கப்பட வேண்டும் என்கிறோம். கூட்டு நாடாளுமன்றக் குழுவானது, இக் கூட்டுக் கொள்ளையில் பங்கு கொண்டவர்களை அடையாளம் காண்பது மட்டுமல்ல, அவர்களுக்கு உரிய தண்டனைகளைப் பெற் றுத்தரவும் வேண்டும். மேலும், இவ்வாறு இமா லய அளவில் ஊழல் நடைபெற்ற முறையை நன்கு ஆய்வு செய்து, எதிர்காலத்தில் இது போன்று நடைபெறாதிருக்க எவ்விதத்தில் மாற்றியமைக்கப் பட வேண்டும் என்றும் அது கூறிட வேண்டும். இவ்வாறு செய்வதானது, எதிர்காலத்தில் ஊழலை முற்றிலுமாக ஒழிக்க முடியாவிட்டாலும் அதன் அளவைக் குறைத் திட உதவிடும்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து விசார ணை நடைபெற வேண்டும் என்று கோருவது நாட்டின் அரசியல் அறநெறியை உயர்த்திப் பிடிக்க வேண்டும் என்பதற்காக மட்டுமல்ல. இதில் நடைபெற்ற ஊழல் காரணமாக அர சுக்கு 1 லட்சத்து 76 ஆயிரத்து 379 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய கணக்கு மற்றும் தணிக்கைத்துறைத் தலை வர் (சிஏஜி) மதிப்பிட்டிருக்கிறார். நாம் இந்த ஊழல் காரணமாக சுமார் 1 லட்சத்து 90 ஆயி ரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக பலமுறை குறிப்பிட்டிருக்கிறோம். இந்தத் தொகையை மீளப் பெறக்கூடிய வகையில் விசாரணைஅமைந்திட வேண்டும். அடிமாட்டு விலைக்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமங்களைப் பெற்றவர்கள் உரிய தொகை யினை அரசுக்குச் செலுத்திட வேண்டும். இதற்கு, தற்போது 3ஜி ஸ்பெக்ட்ரம் ஏலமிட்ட தொகையினை ஓர் அளவுகோலாக (நெnஉாஅயசம) வைத்துக் கொள்ளலாம். இதனை ஏற்க மறுத்திடும் நிறுவனங்களின் உரிமங்களை ரத்து செய்துவிட்டு, அந்த உரிமங்களைப் புதி தாக ஏலமிட வேண்டும்.

இவ்வாறு செய்வதன் மூலம், எவ்வித கூச்சநாச்சமின்றி, மிகவும் கேடுகெட்ட முறையில் கொள்ளையடிக்கப் பட்டுள்ள பொதுச் சொத் துக்களை மீளப்பெறுவதன் மூலம், பொது அற நெறியை (யீரடெiஉ அடிசயடவைல) மீள உறுதிசெய்வது மட்டுமல்ல, இவ்வாறு கைப்பற்றப்படும் தொகை, நாட்டு மக்களின் பெரும்பகுதியினரின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்திட மிகவும் தேவையான ஒன்றுமா கும். உதாரணமாக, உணவுப் பாதுகாப்பை எடுத்துக் கொள்வோம். நாட்டில் உள்ள அனைத்துக் குடும்பத்தின ருக்கும் (வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள்/ வறுமைக் கோட்டுக்கு மேல் உள்ளவர்கள் ஆகிய இரு தரப்பினருக்கும்) உணவு தானியங்களை கிலோ 3 ரூபாய் என்ற விலையில் அளித்திட் டால், அதன் மூலம் கூடுதலாக 84 ஆயிரத்து 399 கோடி ரூபாய் உணவு மானியம் அளிக்க வேண்டும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. 2ஜி ஸ்பெக்ட்ரத்தில் அடிக்கப்பட்டுள்ள கொள்ளையோடு ஒப்பிடும்போது இது அதில் பாதி அளவுத் தொகையேயாகும். எனவே இத்தொகையை மீளக் கைப்பற்றுவதன் மூலம் நாட்டின் உணவுப் பாதுகாப்பை உத்தர வாதப்படுத்த முடியும். அதேபோன்று, நாட்டில் அனைவருக்கும் கல்வி அளிக்க வேண்டும் என்றால், அடுத்த ஐந்தாண்டுகளுக்கு ஆண் டிற்கு 34 ஆயிரம் கோடி ரூபாய் வீதம் மொத் தம் 1 லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் தேவை என்று தேசிய கல்வித் திட்டம் மற்றும் நிர்வாகத் தேசிய நிலையம் (சூஐநுஞஹ-சூயவiடியேட ஐளேவவைரவந கடிச நுனரஉயவiடியேட ஞடயnniபே யனே ஹனஅinளைவசயவiடிn) மதிப்பிட்டிருக்கிறது. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக் கீட்டில் கொள்ளையடிக்கப்பட்டுள்ள தொகை யைவிட இது குறைவேயாகும். இந்த ஆண்டு திட்டமிடப்பட்டுள்ள சுகாதாரத்திற்கான பட்ஜெட் ஒதுக்கீட்டை விட 2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனையில் அடிக்கப்பட்டுள்ள கொள்ளை ஆறு மடங்கு அதிகமாகும்.

ஆட்சியாளர்கள் இப்போதும் தாங்கள் சாமானியர்களுக்காகவே ஆட்சி செய்வதாக நாடகமாடுவது தொடர்கிறது. இவர்கள் நாட் டின் வளங்களைக் கொள்ளையடித்தவர்களி டமிருந்து அவற்றை மீளக் கைப்பற்றுவதற் கான நடவடிக்கைகளை மேற்கொள்ள நிர்ப்பந்திக்க வேண்டும். மேலும், இவ்வாறு கொள்ளையடிக்கப்பட்ட தொகையினை அரசு மீண்டும் கைப்பற்றி, அவற்றை மிகவும் தேவைப்படும் நாட்டு மக்களின் உணவுப் பாதுகாப்பு, கல்வி மற்றும் சுகாதாரத்திற்குப் பயன்படுத்த ஒதுக்க வேண்டும்.

தமிழில்: ச.வீரமணி

Monday, November 15, 2010

பிஎஸ்என்எல் நிறுவனத்தைத் தனியாருக்குத் தாரை வார்க்காதே

16/11/2010 தீக்கதிர்செய்தி

தில்லி பேரணி எச்சரிக்கை
புதுதில்லி, நவ. 15-

பிஎஸ்என்எல் நிறுவனத் தைத் தனியாருக்குத் தாரை வார்க்க ஒருபோதும் அனுமதி யோம் என்று பிஎஸ்என்எல் ஊழியர் சங்க பொதுச் செயலா ளர் அபிமன்யு கூறினார்.

பிஎஸ்என்எல் நிறுவனத் தில் உள்ள பிஎஸ்என்எல் எம்ப் ளாயீஸ் யூனியன் (நம்பூதிரி), என்எப்டிஇ, எப்என்டிஓ, தொமுச உட்பட அனைத்து ஊழியர் சங்கங்களும் அதிகாரி கள் சங்கமும் இணைந்துள்ள கூட்டு நடவடிக்கைக் குழுவின் சார்பில் தலைநகர் தில்லியில் மாபெரும் பேரணி நடைபெற் றது. பேரணி புதுதில்லி, ஜன்பத் சாலையில் உள்ள பிஎஸ் என்எல் அலுவலகத்திலிருந்து புறப்பட்டு, நாடாளுமன்ற வீதி நோக்கி வந்தது. அங்கு நடை பெற்ற கூட்டத்தில் பேரணி -ஆர்ப்பாட்டத்தை வரவேற்று கூட்டு நடவடிக்கைக் குழுவின் கன்வீனர் விஏஎன். நம்பூதிரி உரையாற்றினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடா ளுமன்ற மக்களவைக் குழுத் தலைவர் பாசுதேவ் ஆச்சார்யா பேரணியைத் துவக்கி வைத்து உரையாற்றினார். பிஎஸ்என்எல் எம்ப்ளாயீஸ் யூனியன் (நம்பூ திரி) சங்கத்தின் பொதுச் செய லாளர் அபிமன்யு உட்பட அனைத்து சங்கங்களின் தலை வர்களும் உரையாற்றினர். பேரணியில் பிஎஸ்என்எல் நிறுவனத்தைத் தனியாருக்குத் தாரை வார்த்திடும் வகையில் அரசு நடவடிக்கைகள் மேற் கொண்டு வருவதைக் கண்டித் தும், பிஎஸ்என்எல் நிறுவனத் தைப் பாதுகாத்திடவும் வரும் டிசம்பர் 1 முதல் 3 தேதி வரை 72 மணி நேரம் வேலை நிறுத் தத்தில் ஈடுபடப் போவ தாக அறிவிக்கப்பட்டது.

பேரணியில் உரையாற்றிய அபிமன்யு கூறியதாவது:

இந்தப் பேரணி பிஎஸ் என்எல் நிறுவனத்தைப் பாது காப்பதற்காகவும், வலுப்படுத் துவதற்காகவும் ஊழியர்களும், அதிகாரிகளும் இணைந்து மேற்கொண்டுள்ள போராட் டத்தின் ஒரு பகுதியேயாகும். பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு எதிரான மத்திய அரசின் தவ றான கொள்கைகள்தான் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் நிலைமைகள் மோசமாகிக் கொண்டிருப்பதற்குக் காரண மாகும். கடந்த ஐந்தாண்டு களாகவே அரசாங்கம், புதிய உபகரணங்களை வாங்குவதற் கான அனுமதியை பிஎஸ் என்எல் நிறுவனத்திற்குத் தர மறுத்து வருகிறது. 2006ஆம் ஆண்டில் 45 மில்லியன் லைன் கள் பெற்றிட டெண்டர் வெளி யிட்டிருந்தோம். அதனை அர சாங்கம் ரத்து செய்தது. பின்னர் 93 மில்லியன் லைன்கள் பெற டெண்டர் விட்டிருந்தோம். அதனையும் அரசாங்கம் ரத்து செய்தது. இப்போது சமீபத்தில் 5.5 மில்லியன் லைன்களுக்கான டெண்டரும் விட்டிருந்தோம். இதனையும் அரசாங்கம் ரத்து செய்துள்ளது. அதே சமயத்தில் தனியார் கம்பெனிகள் ஒவ் வோராண்டும் புதிதாக உபகர ணங்கள் மற்றும் கருவிகள் வாங்கவும் புதிய தொழில்நுட் பங்களைப் பயன்படுத்திக் கொள்ளவும் அரசு அனுமதி அளித்து வருகிறது. இதுவே பிஎஸ்என்எல் நிறுவனத்தின் நிலைமைகள் மோசமாகிக் கொண்டிருப்பதற்குக் காரண மாகும். இதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

பிஎஸ்என்எல் நிறுவனம் கிராமங்களில் சேவை செய் வதற்காக தனியார் நிறுவனங் களிடமிருந்து இழப்பீடு பெற்று வந்தது. ஒவ்வோ ராண்டும் ஆறாயிரம் ரூபாய், ஏழாயிரம் ரூபாய் என பெற்று வந்தது. இதனைத் தரவேண் டாம் என்று தனியார் நிறுவ னங்களுக்கு டிராய் அமைப்பு மூலம் அரசு கூறிவிட்டது. இத் தகைய பிஎஸ்என்எல் நிறுவனத் திற்கு எதிரான அரசின் கொள் கையை அனுமதிக்க முடியாது.

பிஎஸ்என்எல் நிறுவனம் சீன நிறுவனம் ஒன்றிடமிருந்து ஆர்டர்களைப் பெற ஒரு டெண்டரை இறுதிப்படுத்தியி ருந்தது. ஆனால், இதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனு மதி தரவில்லை. சர்வதேச எல்லையில் அப்பணிகள் நடப் பதால் அதற்கு அனுமதி தரப் படவில்லை என்று காரணம் கூறியிருந்தது. ஆனால் அதே சீன நிறுவனமானது ரிலை யன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந் தம் செய்து கொள்ள அனுமதி தரப்பட்டிருக்கிறது. தனியா ருக்கு என்றால் ஒரு கொள்கை, பிஎஸ்என்எல்க்கு என்றால் வேறொரு கொள்கையா? பிஎஸ்என்எல்-க்கு எதிரான அரசின் இத்தகைய கொள் கைகளால்தான் பிஎஸ்என்எல் நிறுவனம் நலிவடைந்து வரு கிறது.

அரசாங்கம், பிஎஸ்என்எல் நிறுவனப் பங்குகளில் 35 விழுக்காட்டைத் தனியாருக்குத் தந்திட முடிவு செய்துள்ளது. மேலும் ஒரு லட்சம் ஊழியர்க ளையும் வீட்டிற்கு அனுப்பிட திட்டமிட்டுள்ளது. இவை அனைத்தும் பிஎஸ்என்எல் நிறுவனத்தைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதற்காக மேற் கொள்ளப்படும் நடவடிக்கை களே.

இதனை நாங்கள் அனுமதி யோம். இதனை எதிர்த்துத்தான் வரும் டிசம்பர் 1,2,3 தேதிகளில் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணியாற்றும் அனைத்து ஊழி யர்களும், அதிகாரிகளும் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளோம்.

இவ்வாறு அபிமன்யு கூறி னார். (ந.நி.)