Friday, December 31, 2010

பிஎஸ்என்எல் : விழுங்கத் துடிக்கும் கார்ப்பரேட்கள்

தீக்கதிர் கட்டுரை

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் என்னும் பிஎஸ்என்எல்-இல் டிசம்பர் 1 அன்று தொடங்கி டிசம்பர் 2 அன்றிரவு விலக்கிக் கொள்ளப்பட்ட வேலைநிறுத் தம் என்பது பிஎஸ்என்எல்-இல் வேலை செய்யும் மூன்று லட்சம் ஊழியர்கள், நிறுவனத்தைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதையோ, விருப்ப ஓய்வு என்ற பெயரிலோ அல்லது வேறெந்த வகை யிலுமோ ஊழியர்களின் எண்ணிக்கை யை வெட்டிக் குறைப்பதையோ, ஒரு போதும் அனுமதிக்க மாட்டார்கள் என்கிற பிரகடனத்தின் அடையாளமாக அமைந் தது. பிஎஸ்என்எல் தொடர்புகளுக்காக வெகுகாலமாகக் காத்துக் கொண்டிருக் கும் வாடிக்கையாளர்களுக்குத் தேவை யான கைபேசி இணைப்புகளைக் கொள் முதல் செய்ய வேண்டியதன் அவசியத் தையும் வேலைநிறுத்தம் முன்னிலைப் படுத்தியது.

தனியாருக்குத் தாரைவார்த்தல்

ஐமுகூட்டணி-2 அரசாங்கமானது பொதுத்துறை நிறுவனங்களைத் தனி யாருக்குத் தாரை வார்க்கும் வேலை களை மிகத் துரிதகதியில் செய்யத் தொடங்கியது. சாம் பிட்ரோடா குழு அறிக்கையானது, பிஎஸ்என்எல் நிறு வனத்தில் 30 விழுக்காடு பங்குகளைத் தனியாரிடம் தாரை வார்த்திட வேண்டும் என்றும், ஒரு லட்சம் ஊழியர்களை வெட்டிக்குறைத்திட வேண்டும் என்றும், கேந்திரமான தனியார் ஒருவரைக் கூட் டாளியாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் பரிந்துரைகள் செய்திருந்தன. பிஎஸ்என்எல் ஊழியர்கள் இவற்றை முழுமையாக எதிர்த்து நின்றபோதிலும், பிஎஸ்என்எல் நிர்வாகம் ஏற்கனவே இந்தத் திசைவழியில் நடவடிக்கை களைத் தொடங்கி இருந்தது. பன்னாட்டு நிறுவனங்களும், இந்தியாவில் உள்ள கார்ப்பரேட் நிறுவனங்களும், பிஎஸ் என்எல் நிறுவனத்தைத் தங்கள் கட்டுப் பாட்டிற்குள் கொண்டுவந்தால் மட்டுமே நாட்டில் உள்ள டெலிகாம் துறையை முழுமையாகத் தாங்கள் வசப்படுத்திக் கொள்ள முடியும் என்பதால், பிஎஸ்என் எல் நிறுவனத்தையும் அதன் கோடிக் கணக்கான ரூபாய் சொத்துக்களையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் எடுத்துக் கொள்ள மிகவும் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தன.

பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு நாட் டின் அனைத்து நகரங்களிலும் மாநகரங் களிலும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப் புள்ள சொத்துக்கள் கேந்திரமான பகுதி களில் அமைந்துள்ளன. அவற்றைக் கைப்பற்றிக் கொள்ள வேண்டும் என்ப திலேயே பன்னாட்டு நிறுவனங்களும், இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களும் மிக வும் ஆர்வம் காட்டி வந்தன. பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதற்காக அமைக்கப்பட்ட துறை யில், பிஎஸ்என்எல் நிறுவனத்தையும் அவ்வாறு தனியாருக்குத் தாரை வார்ப்பது என்பது ஒரு முக்கிய நிகழ்ச்சி நிரலாக இருந்தது அனைவரும் அறிந்த உண்மை யாகும்.

சாம் பிட்ரோடா குழுவின் பரிந்துரை களை அமல்படுத்துவதற்காக டெலிகாம் துறையால் மற்றொரு குழு அமைக்கப் பட்டது. பிஎஸ்என்எல் ஊழியர்கள்/அதிகாரிகள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில், பிஎஸ்என் எல் நிறுவனத்தினை எந்த விதத்திலும் தனியாருக்குத் தாரை வார்ப்பதை அனு மதிக்கமாட்டோம் என்று உறுதியுடன் கூறப்பட்டது. அதேபோன்று சுய ஓய்வு என்ற பெயரில் ஊழியர்களை வெட்டிக் குறைப்பதையும் அனுமதிக்க மாட்டோம் என்று கூறப்பட்டது. ஊழியர்களின் எதிர்ப்பையும் மீறி பிஎஸ்என்எல் நிறு வனத்தைத் தனியாருக்குத் தாரை வார்க்க அரசின் உயர்மட்ட அளவில் திட்டங்கள் தீட்டப்பட்டன.

இந்தப் பின்னணியில்தான் பிஎஸ் என்எல் ஊழியர்கள்/அதிகாரிகள் சங்கங் களின் கூட்டு நடவடிக்கைக் குழு கூடி, அரசின் ஊழியர் விரோத நடவடிக்கை களுக்கு எதிராக உறுதியான போராட்டத் திற்குச் செல்வது என்று தீர்மானித்தது.

டிசம்பர் 1 அன்று காலை 6 மணிக்கு வேலைநிறுத்தம் துவங்கியது. நாடு முழுதும் உள்ள பிஎஸ்என்எல் நிலையங் கள் மற்றும் அலுவலகங்கள் ஸ்தம்பித் தன. பல மாநிலங்களில் மாநில அளவி லான முதன்மை பொது மேலாளர்கள் கூட அலுவலகத்திற்கு வரவில்லை. வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஊழி யர்கள் மிகப்பெரிய அளவில் ஆர்ப்பாட் டங்களிலும் ஈடுபட்டனர். கொல்கத்தா, தில்லி, சென்னை, பெங்களூரு, திரு வனந்தபுரம் மற்றும் பெரிய நகரங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் ஆயிரக் கணக்கான ஊழியர்கள் பங்கேற்றனர். பின்னர் நிர்வாகம் கூட்டு நடவடிக்கைக் குழுத் தலைவர்களைப் பேச்சுவார்த் தைக்கு அழைத்தது. ஆயினும் கோரிக் கைகள் அரசுடனும் டெலிகாம் துறையுட னும் சம்பந்தப்பட்டதால் எவ்விதமான முடிவும் எடுக்கப்பட முடியவில்லை.

முதல் நாள் நடைபெற்ற வேலை நிறுத்தம் முழு வெற்றி பெற்றதால், சில இடங்களில் வேலை நிறுத்தத்தில் சேராத ஒரு சில ஊழியர்கள் கூட இரண் டாம் நாள் வேலைநிறுத்தத்தில் பங்கேற் றனர். கூட்டு நடவடிக்கைக் குழுவின் தலைவர்களுடன் டெலிகாம் துறை செயலாளர் டிசம்பர் 2 அன்று காலை பேச்சுவார்த்தை நடத்தினார். ஆரம்பத் தில் அவர் விரிவான விவாதத்திற்குத் தயங்கியபோதிலும், பின்னர் முழுமையாக ஒத்துழைத்தார். பின்னர் பிஎஸ்என்எல் தலைவர்/மேலாண் இயக்குநருடனும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அவரும் பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பதாக உறுதி அளித்தார்.

பிஎஸ்என்எல் நிறுவனத்தைத் தனி யாருக்குத் தாரைவார்த்திட தற்சமயம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கமாட் டோம் என்றும், ஊழியர்களை சுய ஓய்வில் வீட்டுக்கு அனுப்ப மாட்டோம் என்றும் அரசுத் தரப்பில்உறுதிமொழி அளிக்கப் பட்டது. மேலும் 15 மில்லியன் லைன்கள் வாங்குவதற்கான டெண்டரும் விரைவில் விடப்படும் என்று உறுதிதரப்பட்டது. 2007க்கு முன் ஓய்வுபெற்றவர்கள் தொடர்பான ஓய்வூதியத் திருத்தம் குறித்து மீள கேபினட் குறிப்பு அரசுக்கு அனுப்பப்படும் என்றும் உறுதிதரப்பட் டது. ஊதிய நிர்ணயம் தொடர்பாகவும் சங்கங் களுடன் கலந்து பேசி பிஎஸ்என்எல் போர்டுக்கு அனுப்பப்பட்டு, புதிதாக ஊதிய நிர்ணயம் செய்யப்படும் என்றும் உறுதிதரப்பட்டது.

பின்னர் கூட்டு நடவடிக்கைக் குழு 2010 டிசம்பர் 2 அன்றிரவு 8 மணிக்குக் கூடி அனைத்து அம்சங்களையும் பரிசீலனை செய்தபின் வேலைநிறுத் தத்தை விலக்கிக்கொள்வதென முடிவு செய்தது.

வேலைநிறுத்தத்தில் கிடைத்த படிப்பினைகள்

வேலைநிறுத்தத்தில் முன்வைக்கப் பட்ட கோரிக்கைகளில் ஓரிரண்டு ஊழியர்களின் நிதிக் கோரிக்கைகளாக இருந்த போதிலும், மற்றவை அனைத்தும் பிஎஸ்என்எல் வளர்ச்சியையும் விரிவாக் கத்தையும் உத்தரவாதப்படுத்தக் கூடிய வைகளாகும். அரசின் நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு எதிரான ஓர் அரசியல் வேலைநிறுத்தம் என்றுகூட இதனைக் கூற முடியும்.

அரசுத்தரப்பில் நிறுவனத்தைத் தனியாருக்குத் தற்போதைக்குத் தாரை வார்க்க மாட்டோம் என்றும், சுய ஓய்வில் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பமாட் டோம் என்றும் கூறப்பட்டிருந்தாலும் அவை தற்காலிகமானவைகள் மட்டுமே. அரசின் கொள்கைகளை முற்றிலுமாக முறியடிக்க வேண்டுமானால், அரசின் கொள்கைகளை மாற்றியமைக்கக்கூடிய விதத்தில் அனைத்துப் பகுதி மக்களை யும் இணைத்து வீரஞ்செறிந்த நீண்ட நெடிய போராட்டம் ஒன்றை நடத்த வேண் டியது அவசியம். இதற்கு மக்கள் மத்தி யில் மிகவும் சக்திவாய்ந்த விதத்தில் பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டி யதும் அவசியம்.

டெலிகாம் துறை மிகவும் விரிவான தும் வளர்ச்சியடைந்து கொண்டிருப்பது மான ஒரு துறை. இதில் கிடைக்கும் லாபத்தை விழுங்குவதற்காக அரசாங்கம், பன்னாட்டு நிறுவனங்கள், பெரும் வர்த் தக நிறுவனங்கள் மற்றும் அரசியல் வாதிகளுக்கு இடையே மிக மோசமான வகையில் கூட்டணி அமைக்கப்பட்டுள் ளது. அவை பிஎஸ்என்எல் போன்ற பொதுத்துறை நிறுவனங்களைப் பலவீனப்படுத்தினால்தான் தாங்கள் மக்களை முழுமையாகக் கசக்கி அதன் மூலம் கொழுக்க முடியும் என்பதால் அதற்கேற்ற வகையில் மிகவும் இழிவான முறையில் திட்டங்களைத் தீட்டிவரு கின்றனர். இவர்களின் இத்தகைய இழி முயற்சிகள் முறியடிக்கப்பட்டு, பிஎஸ்என் எல் நிறுவனம் பாதுகாக்கப்பட்டு வளர்த் தெடுக்கப்பட வேண்டும். தொழிலாளர் வர்க்கம் விழிப்புடனிருந்து, மக்களின் ஆதரவுடன் இப்போராட்டத்தை மேலும் தீவிரமான முறையில் முன்னெடுத்துச் சென்று, அரசின் மக்கள் விரோத, தொழி லாளர் விரோத நவீன தாராளமயக் கொள் கைகளை முறியடித்திட வேண்டும்.

கட்டுரையாளர் :

-வி.ஏ.என். நம்பூதிரி
பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத் தலைவர்,

தமிழில்: ச.வீரமணி


Privete BroadBand
Dinamalar News